கனடாவில் மொன்றியல்( montreal ) பகுதியில் இடம் பெற்ற தீ விபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய சிறுமி, தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், அதிக அளவில் புகையை சுவாசித்த காரணத்தினாலும் உயிர் இழக்க நேரிட்டதாக தெரிய வருகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த சிறுமி, தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த நேரத்தில் உயிரிழந்த சிறுமியின் 18 வயதான சகோதரியும், 10 வயதாக சகோதரனும் வீட்டில் தான் இருந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரும் சாதுர்யமான பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றதால் உயிர் பிழைத்தனர்.
சிறுமி இறந்த மரண செய்தி கேட்டு, அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்து நடந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள வீடுகளின் அனைத்து தளங்களிலும் புகை எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அவை முறையான செயற்படுகின்றனவா? என்பதை பரிசீலிக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே நேற்று டொராண்டோவில் இரண்டு வயது குழந்தை 14வது மடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி வரும் நிலையில், மொன்றியல் பகுதியில் தமிழ் சிறுமி தீயில் சிக்கி இறந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms