கனடாவின் வடக்கு மனிடொபாவில் கொடூரமான கரடிகள் மக்கள் கண்களுக்கு அடிக்கடி தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hudson விரிகுடாவின் கடற்கரையில் அடிக்கடி கரடிகள் சுற்றி திரிவதால் அந்தப் பகுதியின் “வழக்கமான குடியிருப்பாளர்கள் ” என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
மணிதொபாவில் கடந்த 40 வருடங்களாக கொடூரமான கரடிகளின் நடமாட்டத்தை அதிக அளவில் காணமுடிகிறது. மேலும் கரடிகள் ஏற்படுத்தும் பெருங்கடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை ,சஸ்கட்ஸ்வான் பல்கலைக்கழகத்தின் Doug Clark தலைமையிலான வனவிலங்கு நிபுணர்கள் குழு உறுதி செய்துள்ளது.
முந்தைய தசாப்தங்களை விட தற்பொழுது தென்படும் கரடிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி தென்படும் கரடிகளின் விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை கவனித்துள்ளதாக Saskatchewan பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறையின் இணைப் பேராசிரியரான Clark கூறினார்.
இயற்கை வளங்கள் மற்றும் வடக்கு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் Clark-ன் ஆராய்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் அந்த கொடூரமான கரடிகள் அங்கு இனப்பெருக்கம் செய்வதை உறுதிப்படுத்தவில்லை.வடக்கு மணிதொபாவில் வசிக்கும் மக்கள் துருவக் கரடிகளை கையாள்வது குறித்து முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கரடிகளின் தாக்கங்களை தவிர்ப்பதற்காக தங்களது வீடுகளை வித்தியாசமாக வடிவமைக்கின்றனர்.