ஒன்ராரியோவின் பெரும்பாலான இடங்களில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குயின்பார்க்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே முதல்வர் டக்போர்ட் இதனைத் தெரிவித்தார்.
ஒன்ராரியோவின் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ரொராண்டோ, பீல்பிராந்தியம், யோர்க் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், கிங்ஸ்டன், (Kingston) புரொன்டெனாக் (Frontenac),லெனாக்ஸ், (Lennox) அடிங்டன் (Addington) ஹேஸ்டிங் (Hasting), பிரின்ஸ் எட்வர்ட் (Prince Edward) உள்ளிட்ட சுகாதார பிரிவுகளில் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று பிராந்தியங்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலேயே வீட்டில் இருக்கும் உத்தரவு காணப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்ராரியோவில் டிசம்பர் 26ஆம் திகதியிலிருந்து வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறைகள்:
வீட்டில் இருக்கும் உத்தரவிலிருந்து மீளும் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் புதிய விதிமுறைகள் தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், வியாபார தளங்கள் மற்றும் உணவங்களில் மொத்த கொள்ளளவு பெறுமானத்தில் 25சதவீதமானவர்களுக்கே அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் ஐம்பது சதவீதமானவர்கள் வரையில் உள்ளீர்க்க முடியும் என்றும் எனினும் நீண்ட நேரம் தரித்திருத்தல் சமூக இடைவெளிகள் இன்றி இருத்தலை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மீள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: திடீரென மாற்றப்பட்ட உத்தரவு! கனடாவில் அவசரநிலை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பகுதிகள்!