கனடா முழுவதும் பிராந்தியத்தின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. Covid-19 வைரஸ் தொற்று விரைவாக பரவி வருகின்ற நிலையில் அதற்கான தடுப்பூசி மருந்துகளும் கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் விரைவாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றினால் இன்னும் பல்வேறு துறைகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில் கனடாவில் உள்ள மாகாணங்களில் மேலும் சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைகள் மெய்நிகர் வகுப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இதே வேளையில் தனிநபர் சேவைகள் வழங்கும் துறைகளுக்கு கனடாவின் ஒரு சில பிராந்தியங்களில் ஊரடங்கு தளர்வுகள் கட்டுப்பாடுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இனி வருகின்ற மாதங்களில் தனிநபர் சேவைகள் தொடர்பான துறைகளுக்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும் ஒன்டாரியோ மாகாணம் எதிர்வருகின்ற 12ஆம் தேதி அன்று தளர்வுகள் அறிவித்து இயங்குவதற்கு அனுமதி அளிக்க தீர்மானம் செய்துள்ளது.
தனிநபர் சேவை என்ற அடிப்படையில் அழகு நிலையங்கள், சிகை அலங்கார கடைகள், உடல் பராமரிப்பு, கை மற்றும் கால்களை பராமரித்தல் போன்ற நிலையங்களும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அனைத்து சேவை நிலையங்களும் என்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தாலும் வைரஸ் தொற்று விதிமுறைகளை முறையை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் பல்வேறு சிகை அலங்கார வல்லுனர்களும், அழகுக் கலை நிபுணர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.