கனடாவில் ட்ருரோ, பகுதியில் மூன்று வயது குழந்தை டிலான் எஹ்லர்ஸ் (Dylan Ehler) காணாமல் போய், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில், அவரது பெற்றோர் தகவல் உள்ள எவரும் தெரிவிக்க முன் வருமாறு கெஞ்சுகிறார்கள்.
மூன்று வயது சிறுவன் டிலான் எஹ்லர்ஸ் தனது பாட்டி வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது மே 6 ஆம் தேதி காணாமல் போனான்.
அவர் காணாமல் போன சில மணி நேரங்களிலேயே அவரது பூட்ஸை தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் கண்டுபிடித்தன.
காணாமல் போன சிறுவன் குறித்த தேடல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்தது. ஆனால் பின்னர் அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.
அவரது பெற்றோர், ஆஷ்லே பிரவுன் மற்றும் ஜேசன் எஹ்லர், தங்கள் மகன் கடத்தப்பட்டதாக நம்புகிறார்கள்.
தங்கள் மகனின் பெயரையும், முகத்தையும் பொதுமக்களின் மனதில் வைக்க விரும்புவதாக தந்தை பிரவுன் கூறினார்.
“எங்கள் மகனை கண்டுபிடிக்க உதவுவதற்காக, மக்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்கும்படி நாங்கள் கெஞ்சுகிறோம்,” என்று அவர் கூறினார்.
தங்கள் மகன் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு $ 10,000 வெகுமதி அளிப்பதாக கூறினார். நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் வெகுமதி $15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணம் ஒரு அறக்கட்டளை கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக எஹ்லரின் பெற்றோர் தெரிவித்தனர்.
மூன்று வயது குழந்தை காணாமல் போனதில் எந்தவிதமான மோசமான சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை என்று ட்ரூரோ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எஹ்லர் உயிருடன் இருப்பதாக நம்புவதாக சிறுவனின் தந்தை பிரவுன் கூறினார்.
Toronto : டொராண்டோவில் 14 ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தை! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms