கனடாவில் Covid-19 நோய்த்தொற்று இல்லையா? – வைரஸ் தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் மக்கள்

face mask
face mask

கனடாவின் Covid-19 சுகாதார நடவடிக்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வரும் நிலையில் மருத்துவமனையில் Covid-19 வழக்குகள் தினசரி பதிவாகி வருகின்றன.

Covid-19 பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக குறைந்த மட்டத்தில் உள்ளது என்று மாகாண அதிகாரிகளால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் 2230 Covid-19 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்பொழுது மருத்துவமனையில் Covid-19 சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1500 ஆக உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையில் 402 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாரயிறுதியில் மருத்துவமனைகள் முழுமையான தரவுகளை வெளியிடுவதில்லை என்பதாலும் சில மருத்துவமனைகளில் இருந்து முழுமையான அறிக்கைகள் கிடைக்கவில்லை என்பதாலும் covid-19 வழக்குகள் குறித்த தரவுகள் முழுமையடையாது என்று மாகாணம் எச்சரித்துள்ளது.

பிப்ரவரி 10, 11 ,12 ஆகிய தேதிகளில் முறையே தொடர்ச்சியாக 5,6,1 என்ற எண்ணிக்கையில் Covid19 பாதிப்பினால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 26 நாட்களில் covid-19 தொடர்பான 22 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது மாகாணத்தின் இறப்பு எண்ணிக்கை 12093 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய Covid-19 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் PCR பரிசோதனைக்கு யார் தகுதியானவர்கள் என்ற வரம்புகள் காரணமாக நோய்த்தொற்றின் உண்மையான எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய முடியவில்லை.