அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒன்ராரியர்கள் தற்போது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று காரணமாக கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசி மருந்துகள் மற்றும் பைசர் தடுப்பூசி மருந்துகள் கனடா அரசாங்கத்தால் பெறப்பட்டு தற்பொழுது கனடாவில் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கனடா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்திரா ஜெனி கா தடுப்பூசி மருந்துகள் ஒன்டாரியோ பகுதியை வந்தடைந்துள்ளது. சுமார் இரண்டு லட்சம் தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு இருக்குமென்று தகவல்கள் வெளியாகின்றன.
ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனி கா தடுப்பூசி மருந்துகள் ஒன்டாரியோ வந்தடைந்துள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் பணியினை விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் ஒன்டாரியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தேக்கி வைத்திருக்கும் தடுப்பூசி மருந்துகளை மாகாணம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 300 மருந்தகங்களுக்கு வினியோகிக்கும் பணி இன்றிலிருந்து தொடங்கப்படும் என்று தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை அடுத்து ஒன்டாரியோ முழுவதும் தடுப்பு மருந்துகள் விரைவில் வினியோகிக்கப்பட்டு விடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
Drug Mart, Rexall, Loblaws and Costco ஆகிய மருந்தகங்களில் கொரோனா தடுப்பூசியை ஒன்ராரியர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோவின் கொரோனா தொற்றுக்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார துறையின் தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.