CERB : வேலையை இழந்த கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு! அதிரடி காட்டும் மத்திய அரசு!

Greenhouse
Greenhouse Effect Canada

CERB : கனடாவில் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், தனிப்பட்ட ரீதியாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாவும் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

இந்த வேளையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையை இழந்த மக்களுக்கு வழங்கப்படும் அவசர கால உதவியை நீட்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுகாதார சிக்கல் மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

கொரோனா தாக்கத்தால் பொருளாதார சரிவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், கனடாவில் கொரோனாவால் வேலை இழந்த மக்களுக்கு வழங்கப்படும் அவசர உதவியை செப்டம்பர் 27 வரை நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

CRA : கனடாவில் இணையத் தாக்குதல்களால் முடக்கப்பட்ட வருவாய் முகமையின் இணைய சேவை மீண்டும் தொடக்கம்!

இதன் காரணமாக புதிய நடவடிக்கைகளை தொடங்குவதற்கான செலவு ஒரு வருடத்திற்கு 37 பில்லியன் கனேடிய டாலர்கள் ஆகும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 4.5 மில்லியன் கனடியர்கள், அதாவது மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் தற்போது ஒரு மாதத்திற்கு 2,000 டாலர் அவசர உதவியைப் பெறுகின்றனர்.

செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு பின்னர், அவசர உதவி கோருபவர்கள் வேலையின்மை சலுகைகள் திட்டத்திற்கு மாற்றப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.’

மேலும், வேலையின்மை சலுகைக்கு தகுதி பெறுவதற்கான விதிகளையும் தளர்த்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே பலர் அவசரகால நிதியை பெற்று வரும் நிலையில், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மேலும் பல பொதுமக்கள் இதில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms