ஹாங்காங் (hongkong) மக்களுக்குப் ஆதரவு வழங்கக் கூடாது என கனடாவிற்கான சீனத்தூதர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், சுதந்திரப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
சீனா தரப்பில் இருந்து ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது.
நீண்ட காலமாக நிர்வாகப் பகுதியான மட்டுமே இருந்த ஹாங்காங்கை, தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத்திட்டமிட்ட சீனா, அதற்கான பணிகளை ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறிச் செய்து வருகிறது.
சமீபத்தில் குற்றவாளிகளைச் சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இருந்த போதிலும் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது சீனா.
இந்நிலையில், பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்குப் புகலிடம் வழங்கப்போவதாக இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதிரடியாக அறிவித்தன.
இந்தச் சூழலில், ஹாங்காங் மக்களுக்குப் அடைக்கலம் வழங்கக்கூடாது எனக் கனடாவிற்கான சீனத் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதால், ஹாங்காங்கில் உள்ள வன்முறைக் குற்றவாளிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் கனடாவின் முடிவை எதிர்க்கிறோம்.
நிச்சயமாக, கனடாவின் இந்த முடிவு குற்றவாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். எனவே கனடா உண்மையில் ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருந்தால், இந்த முடிவை அவர்கள் கைவிட வேண்டும்.
ஹாங்காங்கில் உள்ள 3,00,000 கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் ஹாங்காங்கில் இயங்கும் கனட நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை இருந்தால், சீனாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: வேலை இழந்த கனேடிய மக்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை! விண்ணப்பிக்க வேண்டிய தகுதி.?
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.