Statistics Canada மற்றும் கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, டிசம்பர் மாதத்தில் மட்டும், கனடாவில் கிட்டத்தட்ட 30,000 பேர் வேலைகளை இழந்தது.தெரிய வந்துள்ளது.
கோவிட் -19 பரவல் காரணமாக காரணமாக 2020 ஆம் ஆண்டு கனடாவில் எண்ணற்ற மக்கள் பல்வேறு துறைகளில் வேலைகளை இழக்க நேரிட்டது.
ஏடிபி கனடாவின் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு 28,800 குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை சம்பளப் பட்டியல் தரவுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு மாற்றத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது.
உற்பத்தி தொழில்கள் பின்னடைவை சந்தித்தன. மிக மோசமான நிலையை எதிர்கொண்ட தொழில்களின் பட்டியலில் அவை இருந்தன. அந்த துறையில் கிட்டத்தட்ட 17,000 க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டது.
வணிக சேவைகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் முறையே 10,000 க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகள் டிசம்பரில் அதிக வேலைவாய்ப்பைக் கண்டன.
ஒரு மாதத்திற்கு முன்பு, கனடாவில் வேலைவாய்ப்பு 40,800 அதிகரித்துள்ளது, பின்னர் மிகப் பெரிய அதிகரிப்பு 12,500 புதிய வேலைகளைக் கண்ட வணிக சேவைகளில் இருந்தது.
ஏடிபி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவரும் இணைத் தலைவருமான அஹு யில்டிர்மாஸின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்திலிருந்து இந்த பெரிய மாற்றம், வணிகங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கியதன் விளைவாகும் என்று கூறினார்.
இதையும் படியுங்க: முறியடிக்கப்பட்ட கொரோனா: உலகில் முதல் நாடாக உட்கொள்ளக்கூடிய மருந்தை கண்டுபிடித்த கனடா!