கொரோனா தாக்கத்தின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில், கனடா- அமெரிக்க எல்லையை தொடர்ந்து மூடுவதை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில், கனடா- அமெரிக்க எல்லை மூடல் தொடர்பான ஒப்பந்தம் காலாவதியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் எல்லைகளை மூடுவதற்கான உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் அமெரிக்காவுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
எல்லையை மூடுவதற்கான காலக்கெடு ஜூலை 21 ஆம் தேதி வரை உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அத்தியவசிய வர்த்தகம் மற்றும் அவசரகால பொது சுகாதார நோக்கங்களுக்காக பயணத்துக்கான அனுமதி தொடர்ந்து வழங்கப்படும்.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms