ரஷ்யா உக்ரைனின் எல்லைப் பகுதியை சுற்றி படைகளை நிறுத்தி உள்ளதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டித்து உக்ரைனுடன் கனடா ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று ஹவுஸ் ஆப் காமன்ஸில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் அதனை செயல்படுத்துவது குறித்து கருத்து வேறுபாட்டில் உள்ளனர்.
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ ,திங்கள்கிழமை இரவு உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் ராணுவ படை குறித்த அவசர விவாதத்தில் ,உக்ரைனுக்கு ஆதரவாக உக்ரைனில் ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தவும் மற்றும் பிற மரணமற்ற கருவிகளை வழங்கவும் தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கொடுமைப்படுத்தப் அவர்களுக்கு எதிராக நிற்பதில் கனடா மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக நிற்பதால் மோதலை விரும்புகிறோம் என்ற அர்த்தமில்லை என்று அவர் ஹவுஸ் ஆப் காமன்ஸிடம் கூறினார்
ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்தால் ,ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுடனும் NATO ராணுவ கூட்டணியுடனும் இணைந்து ரஷ்யா மீது ஒருங்கிணைந்த பொருளாதார தடைகளை விதித்து செயல்படுவதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தினார்.
“நாங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம், நாங்கள் பயப்பட மாட்டோம் ” என்று பிரதமர் கூறினார். அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கட்சியின் தலைவர் எரின் ,லிபரல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அரை நடவடிக்கைகள் என்றும் பிரதமரின் உறுதிப்பாடு வெற்று வார்த்தைகள் என்றும் நிராகரித்தார்.