கனடாவின் உச்சிமாநாட்டில் யூதர்களுக்கான 10 அம்ச செயல் திட்டங்கள்

CERB
Canadian Prime Minister Justin Trudeau speaks during a Covid-19 pandemic briefing from Rideau Cottage in Ottawa on November 20, 2020. (Photo by Lars Hagberg / AFP)

பிரதமர் பங்கேற்கும் உச்சி மாநாடு:

கனடாவின் பன்முகத்தன்மை அமைச்சர் பார்டிஷ் சக்கர் மத்திய அரசாங்கம் நடத்தும் anti-semitism குறித்த தேசிய உச்சி மாநாட்டில் சமூக உறுப்பினர்கள் அரசியல்வாதிகளுடன் நேரடியாக பேச அனுமதிக்கும் என்று கூறியுள்ளார். கனடாவில் பன்முக தன்மை இருப்பதால் அதனைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள கொள்கைகளை நடவடிக்கைகளாக மாற்றுவதற்கு சமூக உறுப்பினர்களுடன் மத்திய அரசாங்கம் ஆலோசித்து ஈடுபடும் என்று கூறினார்.

நடக்கவிருக்கும் உச்சிமாநாட்டில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மத்திய அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் போன்றோர் நாடு முழுவதும் உள்ள யூத சமூக உறுப்பினர்களுடன் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
யூத இன மக்களுக்காக புரட்சி

கனடாவின் சிறப்பு தூதர் இர்வின் கோட்லர் anti-semitism குறித்து கனடா முழுவதும் மட்டுமின்றி சர்வதேச அளவில் எழுச்சி பற்றி பேச உள்ளதாக கூறினார். இது ஒரு புரட்சியாக அமையும் என்று கூறப்படுகிறது.

10 அம்ச திட்டங்கள் :

யூத இன மக்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் ஜெப ஆலயங்கள் போன்றவை தொடர்ந்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. யூதர்கள் மையப்படுத்தப்பட்டு அச்சுறுத்த படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

யூதர்களின் மனித உரிமை அமைப்பில் கடந்த ஆண்டு 2610 ஆன்ட்டி செமிட்டிக் சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இன்றைய உச்சிமாநாட்டில் யூத இன மக்களுக்காக ஆன்ட்டி செமிண்டிசத்தை எதிர்த்து 10 அம்ச செயல் திட்டங்களை முன்னறிவிக்க இருப்பதாக என்று கூறியுள்ளார்