ஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா – தாலிபான்களின் நடவடிக்கைகள்

qatar
canada qatar

ஆப்கானிஸ்தானில் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏற்படுத்தி தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றினர்.தாலிபான்களின் அடக்குமுறை விதிகள் மற்றும் பயங்கரவாத ஆட்சிக்கு மறுப்பு தெரிவிக்கும் மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக பிறந்தனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவின் துருப்புகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்பு ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் அகதிகள் பலரும் பிறரது உதவிகளை நாடுகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதற்கு 145 கனடாவைச் சேர்ந்த அகதிகளுக்கு கனடா உதவியது. வெளியேறிய 145 அகதிகளுக்கும் கனேடிய விசாக்கள் பாகிஸ்தானில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்குள் விசாக்கள் கனடாவுக்கு செல்லும் என்று குடிவரவுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிஸினாவின் செய்தியாளர் தெரிவித்தார்.

2001 முதல் 2014 வரை ஆப்கானிஸ்தானில் ராணுவ பணியின்போது கனடிய வீரர்களுக்கு உதவிய பெரும்பாலான அகதிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் என்றும், தாலிபான்களின் அதிகாரத்திற்கு கீழ் ஆட்சி அமைந்த சூழ்நிலைகள் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அச்சம் இருப்பதாக அலெக்ஸாண்டர் கோஹன் கூறுகிறார்.

கட்டார் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தின் மூலம் கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து 43 கனடியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு நிலப்பரப்பு பயணம் சிறந்த வழிமுறையாகும் என்று கோகன் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அகதிகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும், கனடாவிற்கான பயணத்தை எளிதானதாக மாற்றுவதற்கும் செயல்படுகிறோம் என்று கோஹன் குறிப்பிட்டுள்ளார்