ஜூன் மாதம் இறுதிக்குள் ஏறத்தாழ 14.5 மில்லியன் கனடிய மக்கள் வைரஸ் தொற்று தடுப்பூசியினை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய அரசின் புதுப்பிக்கப்பட்ட காலவரிசை தடுப்பூசிகளின் பட்டியல் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெல்த் கனடா, அங்கீகரிக்கப்பட்ட பைசர் மற்றும் மாடர்ன் தடுப்பூசிகள், அடுத்த ஜூன் மாத இறுதிக்குள் 14.5 மில்லியன் கனடிய மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
மேலும் ஹெல்த் கனடாவினால் கூடுதலான தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அடுத்த ஜூன் மாத இறுதிக்குள் தடுப்பூசிகளை பெரும் கனடிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹெல்த் கனடாவின் மதிப்பீட்டில் உள்ள நிறுவனங்களில் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், அடுத்த ஜூன் மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்கள் மருந்துகளை பெற முடியுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்டாரியோ பகுதியில் வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் புதிய தொற்று பரவல் குறித்த தகவல்களை மறு ஆய்வு செய்வார் என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் தனது இறுதி பரிந்துரை ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு தெரியப்படுத்துமாறு எனவும் எலியட் கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்க: கனடாவை அண்மித்த பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் திரிபு!