உக்ரைன் விமானம் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 ஆயிரம் டாலர் நிதி உதவி வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் 2020ம் ஆண்டில் இந்த வேலைகளுக்கு தான் அதிக சம்பளமாம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் வெடித்து சிதறியதில் 176 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஈரான் பொறுப்பேற்றது. விமானம் வெடித்ததில் கனடாவை சேர்ந்த 57 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடுபத்துக்கு தலா 25 ஆயிரம் டாலர் நிதி உதவி வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு ஈரான் நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள டிரூடோ, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது தேவை இருப்பதால் நிதி உதவியை அறிவித்துள்ளதாகவும் கூறினார்.