கனடாவில் Covid-19 வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருகிறது. மேலும் கனடிய அரசாங்கம் விமானத்துறை போக்குவரத்து உணவு விடுதிகள் போன்ற பல்வேறு துறைகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவித்து அனுதினமும் இயங்க அனுமதித்துள்ளது.
மேலும் கனடிய மக்கள் அதனைப் பின்பற்றி கடைப்பிடித்தும் வருகின்றனர் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது.
இன்றைய நாளின் புள்ளிவிவரத்தின் படி கனடாவில் Covid-19 வைரஸ் தொற்றால் பல்வேறு மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றியும் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 38ஆயிரத்து 922பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 89ஆயிரத்து 850பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.