அமெரிக்காவை தொடர்ந்து, Moderna நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நாடுகளில் பட்டியலில் கனடாவும் இணைந்துள்ளது.
மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 168,000 டோஸ் அளவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாசசூசெட்ஸை தலைமையகமாக கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் மருத்துவ சோதனைத் தரவை மறுஆய்வு செய்த பின்னர், மருந்து கட்டுப்பாட்டாளர் புதன்கிழமை ஒப்புதலை அறிவித்தார்.
“வழங்கப்பட்ட தரவு, மாடர்னா கோவிட் -19 தடுப்பூசியின் செயல்திறனையும் அதன் பாதுகாப்பையும் காட்டுகிறது” என்று கூறிய ஹெல்த் கனடா. தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிப்பதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதனை பயன்படுத்தும் போது முக்கியமான பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை மற்றும் உயிருக்கு ஆபத்தான பாதகமான நிகழ்வுகள் ஏற்படவில்லை. தடுப்பூசி தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல் நாடாக அமெரிக்க கடந்த சில நாடுகளுக்கு முன்னர் அனுமதியளித்தது. இதனைதொடர்ந்து அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், மாடர்னா தடுப்பூசிக்கு கனடா அரசும் அனுமதியளித்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
மாடர்னா தடுப்பூசி நாளை மறுதினம் முதல் கனடாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பைசர் மற்றும் மாடர்னா என 2 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த நாடு என்ற பட்டியலில் கனடா இணைந்துள்ளது.
இதையும் படியுங்க: கனடாவில் சிறு வணிக உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அரசின் அறிவிப்பு!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.