Canada Tamil News: கனடாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கடந்த மாதம் 20ம் தேதி 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என்ற நபர் போலீஸ் உடையில் சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
காலில் ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா – எச்சரிக்கும் கனடா நிபுணர்கள்
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த கொடூர தாக்குதல் ஒட்டுமொத்த கனடாவையும் உலுக்கியது. கனடாவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதிலும் அரிதானது என்பதால், இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்பட்டது.
கனடா தமிழ் செய்திகள்
இந்த நிலையில் நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு கனடாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – கனடா எச்சரிக்கை