Brampton பகுதியில் பெற்ற தாயை கொலை செய்ய முயற்சித்த மகன்! வெளியான பகீர் தகவல்!

Brampton
29-year-old man arrested after allegedly stabbing mother in Brampton

கனடாவில் Brampton பகுதியில், 29 வயதான பிரதீக் மான் என்பவர், தனது தாயை சனிக்கிழமை நண்பகல் நேரத்தின் பொழுது, வீட்டிற்குள் இருக்கும் பொழுதே கொலை செய்ய முயற்சித்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவனை வலை வீசி தேடி வருகின்றனர்.

அந்த நபர் தாயை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். அதற்குப் பின்பு தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற அவசரநிலை குழுவினர் நண்பகல் ஒரு மணி அளவில் இடையூறு அறிக்கைகளை பதிவு செய்தனர்.

Bovaird drive east and dixie road நகரிலுள்ள நியூ பரி கிரசன்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் அங்கு சென்றிருந்த பொழுது குத்து பட்ட அந்த பெண்மணி குத்து காயத்துடன் அங்கே வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு வந்திருந்த பீல் பிராந்திய துணை மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரை trauma மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறினர்.

மேலும் பாதிக்கப்பட்டவர் உடல் நிலையானது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்மணி தொடர்ந்து அதே நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினர் பாதிக்கப்பட்டவரின் மகன் கொலை முயற்சிக்கு ஈடுபட்ட குற்றவாளி என்று விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெகு விரைவில் பாதிக்கப்பட்டவரின் மகனது புகைப்படத்தை காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை பொழுதில் குற்றவாளி போலீஸ் காவலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

இதெல்லாம் போதாது! கனடாவில் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்யும் சுகாதார நடவடிக்கை!