ஊரடங்கு காலத்தில் கனடா மக்கள், ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு உணவாக எடுத்துக்கொண்டதோடு, மது (alcohol )மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தை விட அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
கனடாவில், பல மாகாணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அசாதாரண சுகாதாரச் சூழல் நிலவிவரும் வேளையில், அரசாங்கம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் கனேடிய மக்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு உணவாக எடுத்துக்கொள்வதாகவும், மது மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக, கனடா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் முக்கியமானது, பொழுதுபோக்குக்கு உண்ணும் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகள், மற்றும் மது, புகைப்பழக்கம்.
இவை யாவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி நாட்டு மக்களை ஆரோக்கியமான உணவுத் தேர்வுக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: கனடாவில் மிசிசாகா பகுதியில் பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோரவிபத்து!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.