COVID-19 தொற்று நோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும் கனேடியர்களுக்கான அலுவலக செலவில் 400 டாலர் வரை கோர எளிய செயல்முறையை அறிமுகப்படுத்துவதாக Canada Revenue Agency தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறை 2020 ஆண்டுக்கான வரி தாக்கலில் தனிப்பட்ட வருமான வரி வருமானத்தில், கழிவுகளாக இந்த செலவுகளை கோருவதற்கு ஊழியர்களை அனுமதிக்கும்.
COVID-19 காரணமாக 2020 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு மேலாக வீட்டிலிருந்து பாதி நேரத்திற்கு மேல் பணிபுரிந்து இருந்தால், தகுதியான ஊழியர்கள் விலக்கு கோரலாம்.
தற்காலிக பிளாட்-ரேட் முறை மூலம் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, COVID 19 காரணமாக வீட்டில் வேலை செய்த ஒவ்வொரு நாளும் $ 2 வரை விலக்கு கோர அனுமதிக்கும், அதிகபட்சம் $ 400 வரை சொல்லலாம்.
இந்த புதிய முறையின் கீழ், ஊழியர்கள் படிவம் T2200 அல்லது படிவம் T2200S ஐ பூர்த்தி செய்தால் போதும். தங்கள் பணியாற்றும் நிறுவனத்தால் கையொப்பமிட வேண்டியதில்லை.
வீட்டு அலுவலக செலவினங்களுக்கான பெரிய உரிமைகோரல்களைக் கொண்ட ஊழியர்கள், தங்கள் வீட்டு அலுவலக செலவினக் குறைப்பைக் கணக்கிட, தற்போதுள்ள விரிவான முறையைப் பயன்படுத்தத் தேர்வு செய்யலாம்.
“temporary flat rate method மற்றும் new user-friendly calculator ஆகியவை அதிகமான கனேடியர்களுக்கு விலக்குகளை கோருவதை எளிதாக்கும்” என்று தேசிய வருவாய் அமைச்சர் டயான் லெபவுத்தில்லியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறுகிய தகுதி காலம் நீண்டகால நடைமுறையின் கீழ் சாத்தியமானதை விட, அதிகமான ஊழியர்களுக்கு விலக்கு கோர முடியும் என்பதை அரசாங்கம் கூறுகிறது.
Statistics Canada கூறுகையில், பொதுவாக வீட்டில் இருந்து வேலை செய்யாத 2.4 மில்லியன் கனடியர்கள் அக்டோபரில் அவ்வாறு செய்ததாகக் கூறுகிறது.
இது மொத்தம் 194 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சேமிக்கும் என்று கனடிய ஊதியச் சங்கம் கூறுகிறது.
இதையும் படியுங்க: கனடாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அத்துமீறிய நபரின் விபரீத முடிவு!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.