கனடாவில் கொரோனா பதிப்பு தீவிரம்! மீண்டும் பொது முடக்கத்தை எதிர்கொள்ளப்போகும் பிராந்தியம்?

bc
bc ( Evan Mitsui/CBC News)

கனடாவில் மார்க்கம் பகுதியை தலைமையிடமாக கொண்ட தனியார் தரவு நிறுவனமான SCARSIN கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடந்த பணியமர்த்தப்பட்டது.

அந்நிறுவனம், பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையும் என்றும், மக்களிடையே குறைந்தபட்ச தாக்கம் இருக்கும் என்றும் முகநூல் தரவைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டறிந்தது.

டாக்டர் குர்ஜி தெரிவித்த கருத்துபடி, 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கிட்டத்தட்ட 90 சதவீத தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில டொராண்டோ மருத்துவமனைகளைப் போல் அல்லாமல் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் இன்னும் நெருக்கடி நிலைக்கு ஆளாகி வருகின்றன என்றும் கூறினார்.

யோர்க் பிராந்தியத்தின் வலைத்தளத்தின்படி, தற்போது  1,218 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 59 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டொராண்டோவுடன் ஒப்பிடும் போது, யோர்க்கின் சோதனை நேர்மறை விகிதம் 5.6 சதவீதமாக இருந்தது.

டொராண்டோவை விட யோர்க்கில் 100,000 பேருக்கான நோய்த்தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது 100,000க்கு 111 தொற்றுக்கள் உள்ளன.

அரசின் கணிப்பின் படி இனி பாதிப்புகள் கீழ்நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த 10 நாட்களில் தொற்றுக்கள் குறைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

SCARSIN நிறுவனத்தின் முகநூல் தரவு படி, கொரோனாவுக்கு முன்பு பிராந்தியமானது ஆரஞ்சு நிறத்தில் இருந்த நிலையில், தற்போது சிவப்பு மண்டல கட்டுப்பட்டு நிலையை அடைந்துள்ளது.

பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில், பிற பகுதிகளிலிருந்து மக்கள்  கூட்டம் வருவதை கருத்தில் கொள்ளவில்லை.

பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டால், பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறினர். பொது சுகாதார விதிகளுடன் முழுமையாக இணங்குவது முக்கியம் என்று யோர்க் பிராந்தியம் கூறுகிறது.

இதையும் படியுங்க: கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் கொரோனா தடுப்பூசி – பைசர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.